Friday, June 28, 2013

உதயன் பத்திரிகைமீதான அமைச்சரின் வழக்கு செப்ரம்பர் மாதம் வரை ஒத்திவைப்பு!!!

ஈழமக்கள் ஜனநாயக் கட்சிக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் 1000 மில்லியன் ரூபா நஸ் ஈடு கோரி உதயன் பத்திரிகை மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திரை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவினால் மூன்று வழங்குகள் யாழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மூன்று வழக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நிதிபதி அமைச்சர் பணத்திற்காக இந்த வழக்கைப் போடவில்லை அவர் மீதான அவமரியாதை ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளிடப்பட்டமைக்காகவே இந்த வழக்கு போடப்பட்டது என்றும், இது தொடர்பில் உதயன் நிர்வாகம் அமைச்சருடன் ஒரு இனக்கப்படாட்டுக்கு செல்லவேண்டும் என்று நீதவான் தெரிவித்தார்.

எனினும் இன்றையதினம் வழக்கிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எவரும் வருகை தராத காரணத்தினால் அவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் இது தொடர்பில் உதயன் நிர்வாகியுடன் கதைத்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment