Saturday, June 29, 2013

பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் பலி!

பிக்கு ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய காலி லபுதுவ பகுதி விகாரை யொன்றைச் சேர்ந்த பிக்குவை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபரொருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி இரவு சந்தேக நபரான பிக்குவுக்கும், குறித்த நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த பிக்கு அந்நபரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment