Saturday, June 29, 2013

அசாத் சாலியின் ஓட்டமாவடி வருகைக்கு கடும் எதிர்ப்பு! விடுதியில் கழிவு எண்ணெய் தாக்குதல்!

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, ஓட்டமாவடிக்கு இன்று வருகைதரவிருந்த நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலி தலைமையில் இன்றுமாலை கூட்டம் நடத்தவிருந்த விடுதி மற்றும் விடுதி உரிமையாளரின் வீடு ஆகியவற்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கழிவு எண்ணெய் ஊற்றி யுள்ளனர்.

அசாத் சாலி தலைமையில் குறித்த விடுதியில் இன்று மாலை 4.00 மணிக்கு கூட்டம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி மீறாவோடை வீதியிலுள்ள மன்னுஸ்ஸல்வா எனும் தங்கு விடுதி யின் மீதே இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com