ஊடகங்கள் தொடர்ந்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வழங்கி வருவதனாலும் எதிர்காலம் தொடர்பான நம்பிக் கையை ஊடகங்கள் மக்களுக்கு ஏற்படுத்தாதனாலும், எதிர் காலம் பற்றிய நம்பிக்கை அற்ற நிலையிலே, இலங்கையர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார்கள் என அமைச்சர் தேவானந்தா தெரிவித் துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரி வித்தார்.
அத்துடன் வட மாகாண சபைத் தேர்தலில் தனித்தா அரசாங்கத்துடன் இணைந்தா? என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை எனவும். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment