Sunday, June 2, 2013

மட்டக்களப்பில் மூன்று ஆலையங்களின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன: நகையும் அபகரிப்பு

மட்டக்களப்பு, கல்முனை, குருக்கல்மடம் பிரதான வீதியிலுள்ள களுவாஞ்சிக்குடி ஸ்ரீ செல்லக் கதிர்காமம் ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் நேற்று (01.067.2013) இரவு 10 மணிக்கு பின் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 19 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்றிரவு பத்து மணிக்குபின் இடம்பெற்றிருக்கலாம் என கூறும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை அம்பாறை, பாண்டிருப்பில் அமைந்துள்ள திரௌபதியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பாபிஷேக கலசம் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் மூல விக்கிரகம் மற்றும் நவக்கிரகங்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளது் அது தொடர்பாகவும் பிரதேச பொலிசார் விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment