Tuesday, June 4, 2013

அல்கைதாவை உருவாக்கியவர்கள் நாங்கள்! பணத்தை வாரி இறைத்தவர்கள் நாங்கள்!! - ஹிலாரி கிளின்டன் (காணொளி இணைப்பு)

அல்கைதா இயக்கத்தை உருவாக்கியதும், அதற்குத் தேவையான முதலீட்டு அநுசரணை வழங்கியதும் அமெரிக்காவே என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.

ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ள அக்கருத்தைக் கொண்ட காணொளி உலகெங்கிலும் வலம் வருகின்றது.

அவர் அங்கு, சோவியத் தேசத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக, சோவியத்துடன் நல்லிணக்கத்தைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபடுவதற்காக, 30 ஆண்டுகளுக்கு முன்னர் அல்கைதா பயங்கரவாத இயக்கத்தைத் தோற்றுவித்தாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரேகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனேயே இது மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அங்கு குறிப்பிடாத ஒரு விடயம் உள்ளது. அதாவது, 30 ஆண்டுகளாக இறைமைமிக்க நாடுகள் நிலையில்லாமல் செய்வதற்காக அல்கைதா இயக்கத்திற்கு தொடர்ந்தேர்ச்சியாக பண உதவி வழங்கிவந்துள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment