Friday, June 28, 2013

பழப்பயிர் செய்கையாளர்களுக்கு வழிபிறந்துவிட்டது!

இலங்கையில் வாழைப்பழச் செய்கையை மேலும் ஊக்குவிப்பதற்கும் அதன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் ஜப்பானிய இட்டோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனதா்தின் ஆலோசகர் கொய் வெட்டநெபோ தலைமையிலான ஜப்பானிய தூதுக்குழுவினர் நேற்று(27.06.2013) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவை சந்தித்துரையபோதே மேற்படி தகவலை தெரிவித்தார்.

இலங்கையில் உற்பத்திசெய்யப்படும் பழ வகைகளுக்கு ஜப்பானில் நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இலங்கையில் பழச்செய்கையை ஆரம்பிக்க அரசின் ஒத்துழைப்பை தாம் பெற்றுத்தருவதாக தூதுக்குழுவினரிடம் தெரிவித்த அமைச்சர், வாழைப்பழம், அன்னாசி, றம்புட்டான் போன்ற பழ வகைகள் செய்கை பண்ணுவதற்கு இலங்கை சிறந்த இடம் என்றும் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகளின் கறுவா தேவையில் 95 சதவீத கறுவாவை இலங்கையே வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com