Wednesday, June 26, 2013

பெண்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளில் இருந்து ஓரளவிற்காவது விடுபடவேண்டுமானால்....( காணொளி)

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும். வன்முறை என்றவுடன் வெறும் உடல் தொடர்பான புறத்தாக்கம் மட்டுமல்லாமல், நிரந்திர மனக் காயங்களைத் தரக் கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய வன்முறை களை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான். குறிப்பாக உளவியல் ரீதியான வன்முறைகள் பெண்கள் மீது பெண்களே அதிகமாகப் பிரயோகம் செய்கிறரர்கள் என்று சொல்லாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முன்னுக்கு வரக் கூடிய பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களை மட்டுமன்றி, முழுக் குடும்பத்தையுமே பாதித்து விடக் கூடியன. ஆக முழு உலகமுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஏதோ ஒரு ரூபத்தில் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை பல வடிவங்களில் சந்திக்கின்றனர். பாலியல் வன்முறை, விபச்சாரம், மானபங்கம் செய்தல், தாக்குதல்கள், மனைவியைத் துஷ்பிரயோகம் செய்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இவற்றின் விளைவாக பெண்கள் சொந்தத் தைரியத்தையும், துணிவையும் பாதிக்கின்றது. வன்முறையின் விளைவாக அவர்கள் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான உடல் ரீதியான வன்முறைளை பொண்கள் ஓரளவிற்காவது குறைத்து கொள்ள சுய தற்பாதுகாப்பானது இன்றியமை யாததாகும்!

கீழே உள்ள காணொளியைப் பார்க்கவும்!



(பி. கே)

No comments:

Post a Comment