Wednesday, June 5, 2013

வட மாகாண சபை தேர்தல் விவகாரம் பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதாக அனைத்துத் பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்துள்ள நிலையில் வட மாகாண சபை தேர்தல் விவகாரம் பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட மாகாண சபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதன் ஊடாக இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி தன்மையினை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த முடியும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில விகாரையில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com