Tuesday, June 4, 2013

பல மோசடிகளில் ஈடுபட்ட பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த அதிகாரி விளக்கமறியலில்!

பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை யூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மேசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குறித்த நபர் கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து 2.6 மில்லியன் ரூபாவை பெற்று பலரை ஏமாற்றியுள்ளதாக கோட்டை மற்றும் கொம்பனிவீதி பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் மத்திய வங்கியில் கையிருப்பிலுள்ள தங்கத்தில் 100 கிலோகிராம் தங்கத்தை பெற்றுதருவதாக பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 11 நபர்களில் குறித்த நபர் முக்கிய சந்தேகநபராக உள்ளார் என்பதுடன், இவருக்கெதிராக 15 வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com