Tuesday, June 4, 2013

யாழில் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்ய நடவடிக்கை!

யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் நடைபெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது. மற்றும் வெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைக் கைவிட்டு மற்றுத் தொழிலைச் செய்யுமாறும் அல்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது யாழில் முழுமையாக தடை செய்யப்பட்ட மீன்டிபிடி முறையை ஒழிக்குமாறு கடற்றொழில் அமைச்சிடமிருந்து தொடர் கடிதங்கள் வந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment