Saturday, June 1, 2013

வடக்கின் வசந்தம் மெய்யறிவையும் சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசு திரிய வேலைத்திட்டம்.

மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசு திரிய தேசிய வேலைத்திட்டம் இதுவரை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளிற்கு குறுகிய கால ஆறுதலை வழங்கி இனங்களுக்கிடையில் சமய ரீதியான மனித நேயத்தை வலுவூட்டுதலும், தலைமைத்துவப் பயிற்சியையும் நோக்கமாகக் கொண்டு மூன்று வருடங்களிற்கு அதிகமாக செயல்பட்டன.

இரண்டாம் கட்டமாக இளைஞர் யுவதிகள் மத்தியில் மனித நேயத்தை நிலைப்படுத்தும் நோக்கோடு சிசுதிரிய கழகங்கள் அமைக்கப்பட்டன. இதனூடாக மனித நேயத்தினை வளர்க்கும் பல செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மூன்றாம் கட்டமாக ஒவ்வொரு கல்வி வலயங்களையும் சேர்ந்த மாணவ தலைவர், தலைவிகளிற்கு சிறந்த பயிற்சியை வழங்கி, நடத்தை மாற்றமடைந்த பிரதிநிதிகளாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் செயற்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

நற்பண்புகளை மதிக்கின்ற ஒழுக்கமுள்ள, தேசப்பற்றுள்ள, ஆத்மீக வளர்ச்சியைக் கொண்ட இளைஞர் யுவதிகளின் வலையமைப்பொன்றை மேற்கொண்டு சமூக அபிவிருத்தியில் சக்தி வாய்ந்த முன்னோடிகளாக மாற்றி யதார்த்தபூர்வமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மூன்றாம் திட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளன.

1.0 அறிமுகம் - மெய்அறிவையும் சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசு திரிய வேலைத்திட்டம்

2006ம் ஆண்டு கெபிடிகொல்லாவையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இடம் பெயர்ந்த மாணவ மாணவிகளிற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் சிந்தனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் திட்டமாகும். இத் திட்டத்தின் கீழ் மோதல்கள் நிலவிய பிரதேசங்களிலும், கஸ்டப் பிரதேசங்களிலும் வாழ்கின்ற பல இனங்களைக் கொண்ட க.பொ.த சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும் கல்வி கற்கும் மாணவ மாணவிகளிற்கு பயங்கரவாதத்தால் ஏற்பட்ட உள தாக்கங்களை குறைப்பதற்கும், பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள கல்வியை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இத் திட்டத்தின் கீழ் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற மோதல்கள் நிலவிய கஸ்டமான மாவட்டங்களில் மாணவர்களிற்கு சிறந்த பலன் கிடைக்கப் பெற்றுள்ளன.

2.0 நோக்கம்

பல தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாத செயல்களால் தேசத்தின் சமூக, கலாசார அமைப்புக்கள் முழுவதிலும் பரவிக்காணப்பட்ட வஞ்சனை, நம்பிக்கையின்மை, சந்தேகம் போன்றவற்றை அகற்றி ஒவ்வொரு இனங்களிற்கிடையே அவரவர்களை மதிக்கின்ற அவரவர்களின் தனித்துவத்தை பாதுகாக்கின்ற ஒரு திட்டத்தை இத் திட்டம் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்துள்ளது. புரிந்துணர்வை மேம்படுத்துவதனூடாக பல தசாப்தங்களாக அடக்கு முறையில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற சமூக தன்மைகளை சீராக்குதலும், இத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும். இன ரீதியாகவும், சமயரீதியாகவும், வகுப்பு ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பிளவுகளை இனங்கண்டு, இவைகள் சமூக அபிவிருத்திக்கு பாதகமாக இருக்கின்றன என்பதனை இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நோக்கமாகும். பல குழுக்களாக பிரிந்து அதனூடாக ஒரு தனித்துவத்தை
உருவாக்கி இருப்பினும், அவற்றை அனைத்தும் மனிதர்களிற்கிடையில் நிலவுகின்றது என்பதனை விளக்குவதும் இன்னொரு நோக்கமாகும்.

நற்செய்திகளை வழங்கி, நேர் சிந்தனைகளை உருவாக்கி, ஆளுமை விருத்தியை ஏற்படுத்தி இளைஞர் யுவதிகளின் நடத்தைகளை நல்வழிப்படுத்தி, சமாதானத்திற்கும், சமூக அபிவிருத்திக்கும் அர்ப்பணிக்கும் சிறந்த இளைஞர் யுவதிகளை உருவாக்கி, அவர்களை ஒவ்வொரு மாவட்டங்களிற்கும் சமாதான தூதுவர்களாக ஈடுபடுத்தல் இத் திட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

அத்துடன் பொருளாதார வசதிகள் தேவைப்படும் இளைஞர், யுவதிகளை இனங்கண்டு அப்பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதும், இளைஞர் யுவதிகளிற்கும், நிர்வாகிகளிற்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்படுத்தி பொது நிர்வாகம் தொடர்பான கொள்கைகளை தயாரித்தல் மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்கும் இத் திட்டம் அர்ப்பணிப்போடு செயற்படுகின்றது.

3.0 சிந்தனை மறுசீரமைப்பு பகுதிகளும் அதற்காக பங்களிக்கும் வளவாளர்களும்

மோதல்கள் இடம் பெற்ற பிரதேசங்களில் மாணவ மாணவிகளின் மெய்யறிவை விருத்தி செய்வதன் மூலம் விளைதிறன், சுயகௌரவம், ஆளுமை விருத்தி, தேசிய பொறுப்பு, தலைமைத்துவம், நாடகங்களை இரசித்தல், மோதல்களை சமநிலைக்கு கொண்டு வருதல், மன அழுத்தத்தை குறைப்பதற்கான உளவள ஆலோசனைகள், நோக்கம், மற்றும் எதிர்பார்க்கும் இயற்கை, அழகியல் போன்ற துறைகளிற்கு புறம்பாக உயர்தரப் பாடப் பரப்புகளோடு, விரிவுரைகளிலும் பங்கு கொண்டு தமது அறிவு மற்றும் புரிந்துணர்வை விருத்தி செய்து கொள்ள முடிகிறது.

வணக்கத்திற்குரிய பேராசிரியர் கம்புறுகமவே வஜிரநாகிமி அவர்கள், மாதுறுவாவே சோபித சாகிமி, பண்டாரவளை நமிதநந்தநாகினி கொட்டபொல, அமரகீர்த்தி, நாகிமி லுனுகம்வேகர, விமலாந்த நாகினி, மினுவாங்கொட, ஆரிய மைத்திரிய கிமிநாகிமி, விரிவுரையாளர் மிரிஸ்வத்தே, விமல ஞானநாகினி, உடுவதம்மாலோக நாகிமி, சிக்டஸ்நிக்கலஸ் பெர்னாண்டோ, குருகுலசூரிய பங்குத் தந்தை அவர்கள், ஜெயநாத் பண்டித ரத்தன பங்குத் தந்தை அவர்கள், மௌலவிநியாஸ் அவர்கள், தாசீம் மௌலவி அவர்கள், பஸ்ருள் ரகுமான் மௌலவி அவர்கள், பாலசுப்பிரமணியம்
குருக்கள் அவர்கள், நித்தியநாதன் குருக்கள் அவர்கள், பேராசிரியர் ஓ.ஏ.அளையபெரும அவர்கள், பேராசிரியர் பியசீலி விஜயமான்ய அவர்கள், பேராசிரியர் சரத்பொடகம அவர்கள், பேராசிரியர் ர்.ஆ.னு.சு.கெரத் அவர்கள், கலாநிதி சிறிமல் அபேரத்னஅவர்கள், பேராசிரியர்.வி.நந்தகுமார் அவர்கள், கலாநிதிபுஞ்சிநிலமே மிக்கஸ்வத்தே அவர்கள், கலாநிதி சரத்கம்லத் அவர்கள்,சிறந்த விரிவுரையாளர் து.சு.P சூரியபெரும அவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர் அத்தநாயக்க ஆ கரத் அவர்கள், சிரேஸ்டவிரிவுரையாளர் நவரத்தன ரம்புக்வெல அவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர் தயாரோகண அத்துக்கோரள அவர்கள், சிரேஸ்டவிரிவுரையாளர் ளு.ஆ.ரு.ஏ.ளு சுபசிங்க அவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர் கருணாதிஸ்ஸ அத்துக்கோரள அவர்கள், இலங்கைமன்ற கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் சமன்வீரவன்ஸ அவர்கள், விரிவுரையாளர் கான்த்திகெட்டிகொட அவர்கள்,

விரிவுரையாளர் விஜிதா சிவபாலன் அவர்கள், விளைதிறன் ஆலோசகர் லால்பொன்சேகா அவர்கள், புகழ்பெற்ற விரிவுரையாளர் மொகான்சமரநாயக்கா அவர்கள், திரு திமுதுபியசேனா அவர்கள் திரு.பாலசூரியா ஆராய்ச்சி அவர்கள், ஜனாப்சபீர் ஆ கசீம் அவர்கள், திரு கேமந்த புஸ்பகுமார் அவர்கள், மேஜர் பிரியந்த விக்கிரமசூரிய அவர்கள், திரு சந்தனகுணவர்த்தன அவர்கள், திருமதி அரோசா பெரேரா அவர்கள், திருமதி பிரபா பிரியதர்சினி அவர்கள், திரு வசந்த விமலசேன அவர்கள், திரு பிரதீப் பத்தபெரும அவர்கள், புகழ்பெற்ற ஓவியர் தயாராஜபக்ச அவர்ர்கள், திரு பலாங்கொட சரத்மது அவர்கள், திரு ஜனகரட்ணாயக்க அவர்கள், திரு பந்துலகரிஸ்சந்திர அவர்கள், திரு விஜயந்த உப்பத்த திரு வசன்த சிறிநாத் அவர்கள் போன்றோர் போதனைகளின்
மூலம் பங்கு கொள்வர்.

4.0 பயன் பெற்ற பாடசாலைகள்

இதுவரை காலம் மோதல்கள் இடம்பெற்ற மற்றும் பின்தங்கிய பாடசாலைகள் பலவற்றின் மாணவ மாணவிகளின் மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தல் சிசுதிரிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு, அதற்கமைய அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவ மாணவிகள் இத்திட்டத்தின் பயனை அடைந்துள்ளார்கள்.

சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுடன் நல்லுறவை விருத்தி செய்வதனூடாக கொழும்பு ஆனந்தா வித்தியாலயம், கிராண்ட்பாஸ் சங்கபோதி வித்தியாலயம், ஹோமாகம மகா வித்தியாலயம், கேஃமத்தமகொட ரத்னாவளி ம.வி, கேஃருவன்னெல்ல ராஜசிங்க மத்திய ம.வி, கஃகண்டி உயர்மகளிர் பாடசாலை, கஃமகாமாயா மகளிர் பாடசாலை, கஃகிங்ஸ்வுட் வித்தியாலயம், கஃசுவர்ணமாலி மகளிர் பாடசாலை, கஃசீதாதேவி மகளிர் பாடசாலை, கஃதர்மராஜா ம.வி, கஃசில்வெஸ்டர் வித்தியாலயம், கஃதிருத்துவக்கல்லூரி, கம்பளை சார்ந்த மகளிர் வித்தியாலயம், தஜ்கர விஜேதுங்க தேசிய பாடசாலை, கம்பளை விக்கிரமபாகு வித்தியாலயம், கஃதெனு ஈரியகம சிறிபேராதனை ஆதார வித்தியாலயம், நுகவெல மத்திய ம.வி
போன்ற பாடசாலைகளின் சந்திப்புக்களை நடாத்தி சகோதரத்துவம், நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் கலந்து கொள்வதற்கு இளமைப்பருவத்தில் கழிக்கும் மாணவ மாணவிகளுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மோதர ஆனந்த வித்தியாலயம், கொழும்பு நாலந்தா வித்தியாலயம், கஃஸ்ரீசுமங்கள வித்தியாலயம், இச் செயற்திட்டத்தில் விரிவுரைகள் மற்றும் துறை வெளிக்கள பயணங்களிற்கும் பங்களிப்பைச் செய்கின்றனர்.

5.0 நென குண வெடும: சிசு திரிய மாணவ கழங்களை அமைத்தல்

நென குண வெடும சிசுதிரிய தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக இது வரைக்கும் தொடர்பு கொண்ட இளைஞர்களான, மாணவ மாணவிகளிற்கிடையில் ஏற்பட்ட சகோதரத்துவத்தை இடைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து செல்வதும்இ அதனூடாக தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய வலயமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதும், சிசுதிரிய மாணவ மாணவ கழகங்கள் அமைப்பதின்முக்கிய நோக்கமாகும். நென குண வெடும சிசுதிரிய கழகங்கள் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய முரண்பாட்டுக்குள்ளானதும் கஸ்டப் பிரதேசங்களிற்குமான பல பிரதேசங்களில் நிறுவப்பட்டதோடு, உற்சாகமுள்ள இளைஞர் யுவதிகள் மீது தலைமைத்துவ ஆற்றல்களையும் விளைதிறன்களையும்
ஊக்குவிப்பதற்கு, மேற்கூறிய மாணவ கழகங்கள் பயனளித்துள்ளன. நென குண வெடும சிசுதிரிய கழகங்களுடாக ஒழுங்கு செய்யப்படுகின்ற சிசுதிரிய கண்காட்சிகள் மூலம் இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கு, அவர்களாகவே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

மேலும் நென குண வெடும வெளியீடுகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மூலமாக இளைஞர் யுவதிகளின் ஆக்கங்களை வெளிக்கொணர்ந்து அகில இலங்கை சமூகங்களுக்கு மத்தியில் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் வசந்தத்திற்காக நடாத்தப்படுகின்ற நென குண வெடும சிசுதிரிய வேலைத்திட்டங்களிற்காக வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற வடமாகாண மாவட்டங்களில் வாழ்கின்ற பாடசாலை மாணவ மாணவிகள் அதிகமானோரை கலந்து கொள்ள வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நற்சிந்தனை வளர்ச்சி ஆத்மீக வளர்ச்சி விளைதிறன்களை மேலும் மேம்படுத்தல் போன்ற பல வேலைத்திட்டங்கள் வெளிக்களச் சுற்றுலாக்கள் மற்றும் விரிவுரைகள் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

திறமை மிக்க வளவாளர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களிற்குச் சென்று இத் திட்டங்களை அமுலாக்குவதால் அதிகமான இளம் சந்ததியினருக்கு இத் திட்டத்தின் கீழ் நற்பயன்கள் கிடைக்கவுள்ளன. ஒவ்வொரு கல்வி வலயத்திற்குள்ளும் இருக்கின்ற மாணவ மாணவிகளும் முறையான பயிற்சிகளினூடாக சிந்தனை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.

அடுத்ததாக அவர்கள் சிந்தனை மறுசீரமைப்பு பிரதிநிதிகளாக பயங்கரவாத பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிற்கும், இலங்கையின் ஏனைய பிரதேசங்களிற்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நென குண வெடும சிசுதிரிய (இளைஞர் ஊக்குவிப்பு) விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பயங்கரவாதத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை சமூக மேம்பாட்டிற்கான சிந்தனைகளை ஏற்படுத்தி, சமூக அபிவிருத்திக்கான பங்காளர்களாக அவர்களை சேர்த்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசுதிரிய வடக்கின் வசந்தம் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பயங்கரவாத செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்த இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் மத்தியில் சமூக நட்புறவை ஏற்படுத்தலும், அவர்களில் சிறப்புமிக்க உழைப்பை சமூக அபிவிருத்திக்கான பங்களிப்பாக மாற்றுவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் திட்டத்தினூடாக பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளை நடத்தை சீராக்கல் பிரதிநிதிகளாகக் கொண்டு, அவர்களை முகாம்களில் வாழ்கின்ற இளம் சமுதாயத்துடன் சேர்த்து இத்திட்டத்தினூடாக பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம், இவ் வேலைத்திட்டத்தின் வளவாளர்கள்
சிறந்த வழிகாட்டல்களை பெற்றுத் தருவதன் ஊடாகவும், வடக்கில் வாழ்கின்ற பல குழுக்களுக்கு நேரடிப் பயனை பெற்றுத் தருவதற்கு யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்தும் சிசுதிரிய மாணவர் கண்காட்சி ஒன்றை வவுனியாவில் அமைந்துள்ள நலன்புரிக் கிராமங்களிலே வசிக்கின்ற இளம் சமுதாயத்தினர் கண்டு களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதோடு, அக்கிராமங்களில் வாழ்கின்ற சித்திரக்கலை, ஆக்கத்திறனை மேம்படுத்தி பங்கு கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

பயன்பெற்ற பாடசாலைகள்

கனுகஹவௌ வித்தியாலயம், யாகவௌ வித்தியாலயம், விகாரஹல் மில்லாவௌ வித்தியாலயம், கெபிரிகொல்வேவ வித்தியாலயம், ஹல்மில்லவெடிய வித்தியாலயம், ஹொரவபொதான வித்தியாலயம், வெலிமுவபதான வித்தியாலயம், வாகல்கடதெமடவ வித்தியாலயம், மதவாச்சி முஸ்லிம் வித்தியாலயம், வெலிஓயாப் பிரதேசத்தில் சம்பத்நுவர வித்தியாலயம், பலுகஸ்வங்குவ வித்தியாலயம், மற்றும் பதவி பராக்கிரமபுர வித்தியாலயம், ருவன்புர வித்தியாலயம், புத்தங்கல வித்தியாலயம், பதவிமகாசென் மகா வித்தியாலயம், தம்மன்னா அலவக மகா வித்தியாலயம், கிரிகல்வௌ வித்தியாலயம், மற்றும் அசேலபுர வித்தியாலயம், வெலிகந்தமகா வித்தியாலயம், நவகினிதமன மகா வித்தியாலயம், திம்புலாகலநெலும்வௌ மகா வித்தியாலயம், மற்றும் செவனபிடிய மகா வித்தியாலயம், விலயாய மகா வித்தியாலயம் மற்றும் புல்மோட்டை முஸ்லிம் வித்தியாலயம், நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், சேருநுவர மகாவெலிகம நவோதயா பாடசாலை, கோமரங்கடவெல வித்தியாலயம், மகாதிவுல்வௌ வித்தியாலயம், தோப்பூர் அல்ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம், தோப்பூர் அல்ஹம்ரா பாத்திமா மகளிர் பாடசாலை, D.S சேனநாயக்கா தேசிய பாடசாலை, பண்டாரநாயக்கா மகளிர் மகா வித்தியாலயம், உகன மகா வித்தியாலயம், திவுலான மகா வித்தியாலயம், சென்னல் சாகிரா வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், கணேச மகா வித்தியாலயம், சம்மாந்துறை அல்மர்ஜான் மகா வித்தியாலயம், மற்றும் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடிமாத்திய மகா வித்தியாலயம், மற்றும் ஓட்டமாவடி பாத்திமா மகா வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், மகாஜென வித்தியாலயம், காத்தான்குடி முஸ்லிம் மகா வித்தியாலயம், மீரா முஸ்லீம் மகா வித்தியாலயம், வாகரை மகா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் நேரியகுளம் முஸ்லிம் வித்தியாலயம், மடுகந்தை ஸ்ரீதர்மரத்ன பிரிவேனா மடுகந்த மாமடு மகா வித்தியாலயம், மடுகந்த வித்தியாலயம், சிரிசுமன மகா வித்தியாலயம், ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலயம், நேரியகுளம் அல்-ஹாமியா வித்தியாலயம், செட்டிகுளம் நவோதயா வித்தியாலயம், பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்தா கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், செட்டிகுளம் வித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் மகா வித்தியாலயம், வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா மகளிர் வித்தியாலயம், பூவரசன்குளம் மகா வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் மற்றும் அல்-அசார் நவோதயா மகா வித்தியாலயம், புனித சேவியர் மகளிர் மகா வித்தியாலயம், புனித சேவியர் ஆண்கள் பாடசாலை, அல்-மீரா மகா வித்தியாலயம், சித்திவிநாயகர் இந்து வித்தியாலயம், பாத்திமா மத்திய மகா வித்தியாலயம், உயிலங்குளம் வித்தியாலயம், தலைமன்னார் வித்தியாலயம், புனிதவளனார் வித்தியாலயம், புனிதலூசியா மகா வித்தியாலயம், புனிதமேரி கான்தா வித்தியாலயம், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், ரிசாட்பதியுதீன் மகா வித்தியாலயம், புனித அனீஸ் மகா வித்தியாலயம், முருங்கன் மகா வித்தியாலயம், பரிகரிகண்டால் பாடசாலை, மன்னார் அரிப்பு வித்தியாலயம், உசித்தரன்குளம் மகா வித்தியாலயம், இலுத்தோரி வித்தியாலயம், லோறன்ஸ் வித்தியாலயம், கரிசல் வித்தியாலயம், தோட்டவேலி வித்தியாலயம், இலகற்பிட்டி வித்தியாலயம், மொட்டகடாய் வித்தியாலயம், கற்கடந்தகுளம் வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், உடுவில் மத்திய மகா வித்தியாலயம், விக்டோரியா மகா வித்தியாலயம், சண்டிலிப்பாய் இந்து வித்தியாலயம், அருணோதயா வித்தியாலயம், யாழ்ரன் வித்தியாலயம், வைத்திய தியாகராஜ மத்திய மகா வித்தியாலயம், புனித அந்தோனியார் வித்தியாலயம், டெல்பிற் மகா வித்தியாலயம், டெல்பிட்றோமன் கத்தோலிக்க மகளிர் வித்தியாலயம், காரம்பொன்குடாமல் மகளிர் வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், அனலைதீவு மகா வித்தியாலயம், டெல்பிற் சைவப்பிரகாசா வித்தியாலயம், வேலணை மகா வித்தியாலயம், நயினாதீவு மகா வித்தியாலயம், மாங்குளம் மகா வித்தியாலயம், மல்லாவி மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், முத்தையன்கட்டு மகா வித்தியாலயம், கற்சிலைமடு அ.த.க பாடசாலை, யோகபுரம் வித்தியாலயம், பலிநகர் மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம் , கிளிநொச்சி மகா வித்தியாலயம் இபுனித திரேசாமகளிர் வித்தியாலயம், கிளிநொச்சி இந்து வித்தியாலயம், உருத்திரபுரம் மகா வித்தியாலயம், கனகபுரம் மகா வித்தியாலயம், பரந்தன் இந்து வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், முழங்காவில் மகா வித்தியாலயம், குருக்கள்தீவு மகா வித்தியாலயம், வட்டகச்சி மகா வித்தியாலயம், முழங்காவில் மகா வித்தியாலயம், ஜெயபுரம் மகா வித்தியாலயம், வீரவில மகா வித்தியாலயம், இராமநாதபுரம் மகா வித்தியாலயம், திருவையாறு மகா வித்தியாலயம், பளை மத்திய மகா வித்தியாலயம், அக்கராயன்குளம் மகா வித்தியாலயம், போமந்தனாறு மகா வித்தியாலயம், முருகநாதா மகா வித்தியாலயம், பூநகரி மகா வித்தியாலயம் போன்றன ஆகும்.

நந்தன விஜயசிங்க

No comments:

Post a Comment