Wednesday, June 5, 2013

நடைமுறையிலுள்ள கல்வி கொள்கையினை முன்னேற்ற நடவடிக்கை!

பொதுமக்கள், நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து யோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.- ஜயத்திலக்க

நடைமுறையிலுள்ள கல்வி கொள்கையினை மேலும் முன்னேற்றும் வகையில் நாட்டின் தேசிய கல்வி கொள்கை இவ்வருடம் மீளாய்வு செய்யப்படவுள்ளது எனவும், இந்மீளாய்வில் பல புதிய மாற்றங்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாக தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ல்கஷ்மன் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் பொது கல்வி, தொழில்சார் கல்வி, பல்கலைக்கழக கல்வி, பாடசாலை நிர்வாகம், ஆசிரியர் நியமனங்கள், கல்வி திட்டமிடல், தேசிய மற்றும் மாகாண மட்டத்திலான பாடசாலை முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தேசிய கல்விக் கொள்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது எனவும்,இது தொடர்பிலான ஆக்கபூர்வமான சிந்தனைகள் வரவேற்கப்படுவதனால் எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அவற்றை ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கிணங்க பொதுக் கல்வி நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதிய யோசனைகள் திருத்தங்கள் ஆகியவற்றை பொதுமக்கள், நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் லக்ஷ்மன் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

தங்களது கருத்துக்களை தபால் மூலம் அனுப்ப விரும்புவர்கள் தேசிய கல்வி ஆணைக்குழு , இலக்கம். 126, நாவல வீதி, நுகேகொடை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும். அல்லது 0112 816 177 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாக எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் அறிவிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com