Wednesday, June 5, 2013

வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட ஏற்பாட்டுச் சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டதா? தீர்ப்பு விரைவில்!

வாக்காளர்களை பதிவு செய்யும் விசேட ஏற்பாட்டுச் சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என விசாரித்து அதன் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்ககுமென அறிவித்ததுள்ளது.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தை கோரியிருந்தார். இது தொடர்பான சட்டமூலம் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான சத்தியா ஹெட்டிகே, ரோஹினி மாரசிங்க ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் ஆராயப்பட்டது.

சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழும் மக்களுக்கு வாக்குரிமை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment