Tuesday, June 4, 2013

வடக்கு கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும்!

மீண்டும் உரக்கச் சொல்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

வடக்கு - கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும் என்று நேற்று (03) மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடும்போது,

'தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி உட்பட தமிழ்க் கட்சிகள் பல இந்து லங்கா உடன்படிக்கைக்கு ஆதரவு வழங்கியதற்கான நோக்கம் வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உடன்பாட்டிலேயே' என்று குறிப்பிட்டிருக்கின்றார். அது இன்றைக்கும் செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மீண்டும் ஒருங்கிணைக்கும்போது, கிழக்கில் மக்களின் விருப்பினைத் தெரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், அவ்வாறு செய்யத் தேவையில்லை என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன - இந்தியப் பிரதமர் ஆகியோரிடையே புரிந்துணர்வுடன் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாகாண சபைக்காக இடம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டுக் கடன் பெற்றுக் கொள்வதற்குத் மத்திய அரசிடமிருந்து சுயாதீன அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்றும், மக்கள் பாதுகாப்புத் தொடர்பான அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  June 5, 2013 at 10:49 AM  

You are not capable of doing a perfect job atleast in one province,it is something silly and ridiculous to add two provinces together to do a job.It is something
like giving a flower bouquet to an animal

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com