Saturday, June 29, 2013

பிரிட்டன் பிரஜையின் கொலை வழக்கில் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சாட்சி யார்? – நீதிமன்றம்

பிரிட்டன் பிரஜையைக் கொலை செய்தமை, மற்றும் அவரின் ரஷ்ய நாட்டுக் காதலிக்கு உடல் ரீதியான இம்சைகளை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, தங்காலை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள், சட்ட மாஅதிபரின் அதிகாரங்களுக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இதற்கமைய நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அஜரான சந்தேகநபர்களை மீண்டும் நவம்பர் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், தங்கல்ல பிரதேச சபை தலைவர் உட்பட எட்டு சந்தேக நபர்களுக்கு எதிரான முறைப்பாட்டில், அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் சாட்சியாளர்கள் யாரெனக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம மாஜிஸ்ரேட் கிஹான் பிலபிட்டிய இரகசியப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com