Wednesday, June 5, 2013

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்த கும்பல் அதிரடி படையினரால் கைது!

அதிகொள்ளளவு உடைய மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த கும்பல் ஒன்றை பொலிஸ் விசேட அதிரடி படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த கும்பல் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்களை தயாரித்து ஹட்டன் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகவும், அங்கிருந்து 750, 500, 250, சிசி என்ஜின் கொள்ளளவுடைய ட்ரேல் ரக 3 மோட்டாதர் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர்தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த மோசடி வர்த்தகத்தின் பிரதான சந்தேக நபர் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மஸ்கெலிய பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment