Wednesday, June 26, 2013

மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவ உடைமையாக்குமாறு கோத்தபாய பணிப்பு!

புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதே வேளை புலிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வாகனங்கள், வங்கிகளின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள் என்பன அரச உடைமையாக்கப்பட்டுள்ள நிலையில் புலிகள் பயன்படுத்திய காணிகள், வீடுகள் என்பவற்றையும் இராணுவ உடைமையாக்க கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment