Tuesday, June 4, 2013

பௌத்த பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டி பெறுமதி வாய்ந்த சந்திர வட்டக்கற்கள் கொள்ளை!

அநுராதபுரம்- கெப்பத்திக்கொல்லாவா, ஹேரத் ஹில்மிலேவ விஹாரையில் பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு சந்திரவட்டக்கற்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

இன்று(04.06.2013)அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த கொள்ளைச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹேரத் ஹில்மிலேவ விஹாரைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பௌத்தபிக்கு மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின் வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com