Tuesday, June 4, 2013

மகளை கண்டுபிடித்து தருமாறு நாமலின் காலில் விழுந்த தாய்!

தனது காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு கோரி காணாமல்போன யுவதியொருவரின் தாய் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களின் காலில் விழுந்து கண்ணீருடன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமுகமாக யாழிற்கு வருகை தந்த நாமல் எம்.பி வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறும் போதே மேற்படி கோரிக்கையை குறித்த தாய் விடுத்துள்ளார்.

தனது மகள் கிளிநொச்சியிலுள்ள ஒரு வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இவர் காணாமல் போயுள்ளதாகவும் இது குறித்து தாம் கிளி.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் அந்த தாயார் நாமலிடம் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோளை கவனத்திற்கொண்ட நாமல் எம்.பி அருகில் இருந்த யாழ் பிரதிப்பொலிஸ்மா அதிபரை அழைத்து இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com