Sunday, June 30, 2013

இராணுவ பயிற்சியின் போது அதிபர் மரணம்!

சீதுவ பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் ரன்டம்பே மாணவர் படையணி பயிற்சி முகாமில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போது உயிரிழந்துள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. 52 வயதான இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டது.

உடற் தகுதி பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டிருந்தபோதே குறித்த அதிபர் உயிரிழந்ததாக ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment