Monday, June 3, 2013

படுகொலைச் சந்தேக நபர்களின் சடலங்கள் மயானத்திலிருந்து மாயம்! உறவினர்கள் முறைப்பாடு!

சுனந்தோபானந்தாரா விகாரையின் விகாராதிபதி மெடிகஹதென்னெ விமலவன்ச தேரரின் படுகொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சுஜீவ மற்றும் ருவன்ஜித் ஆகியோரின் சடலங்கள், அவர்களை அடக்கம் செய்த மயானத்திலிருந்து காணாமல் போயுள்ளது என சுஜீவ மற்றும் ருவன்ஜித்தின் உறவினர்கள் வாத்துவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இரு சந்தேக நபர்களும் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்காகி உயிரிழந்த நிலையில், அவர்களது சடலங்கள் வாத்துவ பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தன. இன்நிலையில் இவ்வாறு புதைக்கப்பட்ட சடலங்களே காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment