Sunday, June 2, 2013

இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் சிங்கப்பூரில் கைது!

வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக இலங்கை யுவதிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவே உபுல் என்பவர் மலேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் மலேசியாவில் சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடும் முக்கியஸ்தர்களில் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட் இவர்களிடம் மலேசிய பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இறுதியாக இலங்கையில் இருந்து ஐந்து பெண்களை அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment