Tuesday, June 4, 2013

வயது குறைந்த சிறுமிக்கு வயதை கூட்டி திருமணம் செய்து வைத்த பதிவாளரின் பதவி.......

அநுராதபுரம் நகர்பிரிவின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரும், நுவரகம பிரதேச திருமணப்பதிவாளருமான காமினி பண்டாரநாயக்க என்பவர் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மேற்குறிப்பிட்ட திருமணப்பதிவாளர் வயது குறைந்த சிறுமி ஒருவருக்கு வயதை கூட்டி திருமணம் செய்து வைத்தார் எனவும், பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொண்டார் எனவும், குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்

இந்நிலையில் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவருக்கு எதிராக் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையினால் அவர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com