Friday, June 28, 2013

உடற்கட்டு வைத்துள்ள ஆண்களிடம் மனதை பறி கொடுக்கமாட்டாராம் நடிகை கங்கனா!

வாழ்க்கையில் காதலை விட முக்கியமான விஷயங்கள் ஏராளம் உள்ளன எனவும், காதலை யாராவது ஒருவரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும், இப்போது காதல் பற்றி பேச எனக்கு நேரம் கிடையாது எனவும் யாரிடமாவது நான் காதல் வயப்பட்டால் அப்போது காதல் அனுபவங்களை கூறுவேன் எனவும், ஆனால் இப்போ தைக்கு நண்பர்களுடனேயே பொழுதை கழிக்க விரும் புகிறேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடற்கட்டு ஆண்களை திருமணம் செய்யமாட்டேன் எனவும், நான் புத்திசாலித்தனமான, அன்பான குணம் கொண்ட ஆண்களையே திருமணம் செய்து கொள்வேன் எனவும், சிக்ஸ்பேக் உடற்கட்டு வைத்துள்ள ஆண்களிடம் மனதை பறி கொடுக்கமாட்டேன். அவர்களை திருமணம் செய்யவும் மாட்டேன் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவில் கதாநாயகிகளை ஆபாசமாக பொம்மை போல காட்டுகிறார்கள். இது சரியானதல்ல. இந்த ஆபாச முத்திரை என் மீது விழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப் பிடித்து நடிக்கிறேன். கிரிஷ் 3 என்ற படத்தில் ஒரு சாகச போராட்ட காட்சியில் நடித்து வருகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment