Sunday, June 30, 2013

வடமாகாண தமிழ்மொழி தினவிழா!!! (படங்கள் )

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழித் தினவிழா அண்மையில் யாழ் இந்து மகளீர்க் கல்லூரியில் வடமாகாண கல்விப்பணிப்பாளர் வ.செல்வராசா தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பிரதம அதீதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தமிழ்மொழித்தின விழாவை முன்னிட்டு கவின் தமிழ் என்ற நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment