Wednesday, June 5, 2013

மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் தலைமறைவு!

தனது மனைவியை பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அனுப்பிவிட்டு, மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்படுத்திய நபர் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கட்டுக்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த 33வயதுடைய பெண் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்பட்ட நிலையில் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும், இதனை அறிந்து கொண்ட இந்த நபர் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கட்டுக்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com