Thursday, June 27, 2013

சுவீடனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்களை நாடு கடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியிருக்கும் இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதுடன் கணக்கெடுப்பின் முடிவில் அகதிக் கோரிக்கையை யாளர்கள் அனைவரையும் விசேட விமானமொன்றின் மூலம் நாடு கடத்தப்படவுள்ளதாக சுவீடன் அரசாங்கம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் சுவீடனில் தஞ்சமடைந்திருந்தனர் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment