Sunday, June 30, 2013

‘நான் மூத்திரம் குடிக்கவே இல்லை’ என்கிறார் மர்வின்!

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மர்வின் சில்வா மருந்தாக சிறுநீர் அருந்துகின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் மர்வின் சில்வா கருத்துரைக்கிறார்.

அது முற்று முழுதாக பொய்ச் செய்தி என்கிறார் அவர்.

‘எனக்கு எதிரானவர்கள் சோடித்திருக்கின்ற பொய்க் கதை அது. அதற்காக நான் கோபப்படுவதில்லை.

யாரேனும் ஒருவர் என்னைப் பற்றி பொய்க் கதை சோடித்து, அதன் மூலம் ஆனந்தமடைவதாயின் பௌத்தன் என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைவேன். அது நான் செய்த நன்மையே!

நான் ஏன் மருந்தாக மூத்திரத்தைக் குடிக்க வேண்டும். இது முழுமையாக சோடிக்கப்பட்ட பொய்க்கதை’ என்றும் அமைச்சர் தெளிவுறுத்துகின்றார்.

(கேஎப்)

1 comment:

  1. Completely a rubbish one,may be true or not.The readers may be not liking to digest this news item

    ReplyDelete