வவுனியா பூங்காவீதியில் இன்று(26.6.2013) மதியம் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் தனிமையில் நின்றதை கண்ட பிரதேசமக்கள் சிறுவனை மீட்டு வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடியிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இருந்து எந்தவிதமான தகவல்களையும் பெற முடியாதுள்ளதால் சிறுவனை மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யவுள்ளதுடன் தற்காலிகமாக வவுனியா கோவில்குளம் சிறுவர் இல்லத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி எஸ்.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
மேலும் சிறுவனுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் தொடர்பு கொண்டால் சிறுவனை அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என குறிப்பிட்டார்.
Love,affection,sincerity,true parenting,everything slowly declining
ReplyDeleteWe are sorry for the fate of the small child.