Saturday, June 1, 2013

சர்வதேச கவிதைப் போட்டியில் கலைமகனுக்கு ‘கவித்தீபம்’ பட்டம்

இலங்கை வெலிகம, மதுராப்புரையைச் சேர்ந்த கவிஞர் கலைமகன் பைரூஸ் தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் ‘கவித்தீபம்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஸலாஹியா சர்வதேசப் பாடசாலையின் தமிழாசிரியரும், இரண்டாம் மொழி (தமிழ்)வளவாளரும், மொழி பெயர்ப்பாளருமான பைரூஸ்,தடாகம் கலை இலக்கிய வட்டம் சர்வதேச ரீதியில் மாதாந்தம் நடாத்தும் கவிதைப் போட்டியில் ‘காசேதான் பேறாமோ?’ எனும் தலைப்பில் எழுதிய கவிதை சிறப்புக் கவிதையாக தேர்வுக் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்டு ‘கவித்தீபம்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்மாயில் எம். பைரூஸ் எனும் இயற்பெயர் கொண்ட கலைமகன் பைரூஸ், ஏற்கனவே அரச, மாகாண, மாவட்ட, வலயக் கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு முதலிடங்களைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: