Wednesday, June 5, 2013

வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 3 பெண்கள் சுங்க பிரிவினரால் கைது!

52 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட 3 பெண்கள் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மும்பாய் நோக்கி புறப்படவிருந்த போது தங்கத்துடன் கைது செய்யப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

துணி வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் இது போன்ற கடத்தல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சுங்க அத்தியட்சகர் எம்.ஐ.எம்.ரம்பியின் ஆலோசனைக்கமைய இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com