Saturday, June 1, 2013

கண்டி – கொழும்பு அதி சொகுசு கடுகதி ரயில் சேவை 3 ஆம் திகதி ஆரம்பம்!

இம்மாதம் 3 ஆம் திகதி முதல் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் அதிசொகுசு கடுகதி ரயில் சேவையொன்று ஆரம்பித்துவைக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவிததுள்ளார்.

1864 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக கண்டிக்கும், கொழும்புக்கும் இடையில் அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவித்த அமைச்சர் இந்த அதிசொகுசு ரயிலின் 10 பெட்டிகளில் 44 இருக்கைகள் மட்டும் இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் இதன் ஒரு வழிப்போக்குவரத்து கட்டணமாக ஒருவரிடம் இருந்து 500 ரூபா அறவிடப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாது குறித்த சொகுசு ரயில் வண்டி வாரத்துக்கு ஒருநாள் மாத்திரமே பயணத்தை மேற்கொள்ளுவதுடன் இது ராகம, கம்பஹா, பேராதனை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரமே தரித்து நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment