Sunday, June 30, 2013

அவுஸ்திரேலியா மேலும் 22 இலங்கையர்களை நாடுகடத்தியுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்ற மேலும் 22 இலங்கையர்கள் விமானம் மூலம் மீண்டும் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய குடிவரவு சட்டமூலத்தை மீறும் வகையில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த 22 பேரே இவ்வாறு நாடு திருப்பியனுப்பப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் இவர்கள் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலான காலப் பகுதியில் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கை யாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்களில் 1057 பேர் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்கள் என அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment