Friday, June 28, 2013

பாராளுமன்றத்திற்கு அடுத்த வாரம் வருகிறது 19வது அரசியல் சீர்த்திருத்தம்!

அடுத்த வாரம் 19ஆவது அரசியல் சீர்த்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கண்டி – திகனவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை முழுவதும் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் தொடர்பிலும், மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பிலும் பேசப்படும் நிலையில் அடுத்த வாரம் 19வது அரசியல் சீர்த்திருத்தம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment