Monday, June 3, 2013

15 வயதுச் சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய 19 வயது இளைஞன் கைது

புத்தளம் பகுதியில் பாட்டியின் துணையுடன் வசித்து வந்த 15 வயதான சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞன் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி இந்த இளைஞன் சிறுமியை பாட்டிக்கு தெரியாது கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து பலமுறை சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ள நிலையில் குறித்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment