Tuesday, June 4, 2013

தெஹிவளை ரயில் குண்டு சூத்திரதாரிகளுக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை!

1996 ஆம் ஆண்டு தெஹிவளையில் ரயில் வண்டியொன்றில் புலிகளால் குண்டு வைக்கப்பட்டது. இக்குண்டுத்தாக்குதலில் பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டது. இத்தாக்குதலுடன் சம்பத்தப்பட்ட நபர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த 3 சந்தேக நபர்களுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று கடூழிய சிறை தண்டனையை விதித்தது. 2 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனையும் பெண்னொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 17 ஆண்டுகளாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்ததனால் சிறை தண்டனை காலம் மட்டுப்படுத்தப்பட்டதாக கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் அறிவித்தது.

No comments:

Post a Comment