Thursday, May 9, 2013

பிள்ளைகள் மூவரையும் தீயினால் கொடுமைப்படுத்தினான் தந்தை.... - நாவலப்பிட்டியில் சம்பவம்

தமது பிள்ளைகள் மூவரையும் அமானுஷ்ய முறையில் தாக்கி, அவர்களைத் தீயினால் சூடுபோட்ட தந்தையொருவரை நாவலப்பிட்டிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மூன்று நாட்களுக்கு முன்னர் அவர்,தம் மக்களை தீயினால் சூடிட்டு, வீட்டினுள்ளே மறைத்து வைத்திருக்கிறார் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

08 வயதுடைய ஆண்பிள்ளையும், 11 வயது மற்றும் 13 வயதுடைய இருபெண்பிள்ளைகளும் தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று தந்தை நீதிமன்றின் முன் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை சிறைவைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  May 9, 2013 at 9:25 PM  

He is really dangerous even to the society.Prisons or the mental hospital is the place where this person can have a shelter for ever.Wild beast in human skin.The Government or any good well wishers must take the children into their custody .it could be a great thing
that we do to our nation.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com