Wednesday, May 15, 2013

கிளிநொச்சியில் இரவு பகலாக வெசாக் கூடுகளை அமைக்கும் இராணுவத்தினர்!

கிளிநொச்சியில் வெசாக்தினத்தை கொண்டாட படையினர் தயாராகி வருகின்றனர். கிளிநொச்சியில் உள்ள மத்திய கல்லூரி என்ற பாடசாலையில் வெசாக் தினத்தை முன்னிட்டு மாபெரும் வெசாக் வெளிச்சக்கூட்டை படையினர் அமைத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இரவு பகலாக இந்த வெசாக் கூட்டை இராணுவத்தினர் வடிவமைத்து வருகின்றனர். புத்தர் பரிநர்வாண ஞானம் அடைந்த நாளை கிளிநொச்சி மக்களுடன் இணைந்து கொண்டாடவே தாம் தயாராகி வருவதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

வடக்குப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள இடங்கள் எங்கும் இராணுவத்தினர் வொக் தினத்தை கொண்டாடத் தயாராகி வருகின்றனர். யாழ்ப்பாணத்திலும் பிரமாண்டமாக வெசாக் தினத்தை கொண்டாடுகின்றனர்.

வடக்கில் யுத்த்தின் பின்னர் அமைக்கப்பட்ட புத்த விகாரைகளிலும் புத்தர் சிலைகளிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்கார வேலைகளை படையினர் செய்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com