Thursday, May 9, 2013

ஹிருணிக்கா பிரேமசந்திர ஓர் அட்டை – துமிந்த சில்வா

ஹிருணிக்கா பிரேமசந்திர ஓர் அட்டை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். தம்மைப் பயன்படுத்தி பிரபல்யம் அடைந்து கொள்ள ஹிருணிக்கா முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு வெளியே இன்று துமிந்த சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு ஹிருணிக்கா பிரச்சாரம் செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அட்டையைப் போன்று தம்மீது ஏறி இரத்தத்தை உறிஞ்ச ஹிருணிக்கா முயற்சிக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment