Tuesday, May 28, 2013

பக்கவாத நோயினை குணப்படுத்துவதற்கான மருத்துவ சிகிச்சை இனங்காணப்பட்டுள்ளதாம்!பேராசிரியர் கீத் மூவர்

பக்கவாத நோயினை குணப்படுத்துவதற்கான முறைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் இனங்காணப்பட்டுள்ளன எனவும் பிரித்தானிய கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் கீத் மூர் தெரிவித்துள்ளார். இம் மருத்துவ சிகிச்சை தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நரம்புகள் ஊடாக தடுப்பூசியினை ஏற்றி, மூளையின் செயற்பாடுகளை சீர் செய்ய, இந்த சிகிச்சை மூலம் முடிந்துள்ளதாக, பேராசிரியர் கீத் மூவர் தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோ வைத்தியசாலையில் 9 நோயாளர்களுக்கு இது தொடர்பாக சிகிச்சையளிக்கப்பட்டதுடன், இவர்களில் 5 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்த பேராசிரியர் எவ்வாறாயிருப்பினும், இந்த வெற்றி தொடர்பில் நிலையான தீர்மானங்களை எட்ட முடியாது என்றும், தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment