Monday, May 13, 2013

எங்கள் ஆச்சிரமத்தின் நற்பெயருக்கு திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்துகின்றனர். மகாதேவா ஆசிரம நிர்வாகம்.

புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி என்ற விலாசத்தில் இயங்கிவருகின்றது மகாதேவா ஆச்சிரம். குறித்த ஆச்சிரமத்தில் சுமார் 350 போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் , இளைஞர் யுவதிகள் பராமரிக்கப்படுகின்றனர். குறித்த ஆசிரமத்தில் ஆசிரியராக கடமை புரியும் ஒருவரால் அங்குள்ள யுவதி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக நாம் செய்தி வெளிவெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியினை ஆச்சிரம நிர்வாகம் மறுக்கின்றது. இது தொடர்பாக குறித்த நிர்வாகம் தொடர்பில் பேசவல்ல அதிகாரியொருவர் , பாதிப்புக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி பிறிதொரு ஆசிரமத்திலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது நற்பெயருக்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் கூறுகின்றார்.

அத்துடன் அத்துடன் ஆச்சிரமத்தின் தலைவர் திரு . இராசநாயகம் அவர்கள் அனுப்பி வைத்துள்ள மறுப்பறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதி குறித்த சகல உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com