Thursday, May 30, 2013

தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் வாழும்போது, வாழ வேண்டிய தேரர்கள் தீக்குழிக்கிறார்கள்!

'தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் வாழ்ந்துகொண்டிருக்க, வாழ வேண்டிய தேரர்கள் தீக்குளிக்கிறார்கள்' என ராவண பல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.

'இந்நாட்டின் சில தேரர்கள் காலையுணவைப் பெற்றுக்கொண்டு, பாகலுணவைப் பெற்றுக் கொள்வதைப் பற்றிச்சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு பற்றிய கவலையில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எங்களை விமர்சிப்பதே தவிர வேறொன்றும் இல்லை.

போவத்தே இந்திரரத்ன தேரர் சிறந்த, நற்குண, சக்திமிக்க தேரர்களில் ஒருவர். அவர் வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர். அவர் தீர்மானித்ததொரு விடயம் உள்ளது. மாடுகளை அறுப்பதற்கு எதிராக அவர் எழுந்துநின்றார். ராவண பல அமைப்பினராகிய நாங்களும் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராக எழுந்து நிற்போம். அதுபற்றி வெகுவிரைவில் பார்த்துக்கொள்ளவியலும்' என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com