Wednesday, May 29, 2013

மாடுகள் அறுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியே!

போவத்தே இந்திரரத்ன தேரர், தனது தனது ஆடைக்குத் தீவைத்து தற்கொலை செய்துகொண்டதானது ஏற்கமுடியாததும், எந்த வேளையிலும் கடைசியாகச் செய்ய வேண்டியவற்றை முற்கூட்டியே செய்வது பொருத்தமற்றது எனவும் தேசாபிமானி தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணவங்ச தேரர் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது,

மாடுகள் அறுப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் கூட ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சியாகவே இருக்கும்.

தேரர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டின், இதற்கு முன் எத்தனையோ முறைகள் இருந்தன. ஸ்ரீமாபோதியை பயங்கரவாதிகள் குறிவைத்தது, அரந்தலாவில் பௌத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டமை, தலதா மாளிகைக்கு குண்டு வைத்தல் போன்ற பலவற்றை உதாரணத்திற்குச் சொல்லலாம். என்றும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com