Monday, May 6, 2013

யாழில் பல இலட்சங்களை சுருட்டிய மூவர் கைது!

யாழ்.நகர வர்த்தகர்கள் சிலரை மிரட்டி கப்பமாக பல லட்சம் ரூபாவை சுருட்டிய மூவர் குழுவை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இவர்களில் சிங்களவர் ஒருவரும், யாழ்ப்பாண இளைஞர்கள் இருவருமே இவ்வாறு பொலிஸாரிடம் நேற்று(05.05.2013) மாட்டினர்.

குறித்த சிங்களவர் வர்த்தகர்களிடம் தான் இராணுவச் சிப்பாய் என அறிமுகப்படுத்தி, பின்னர் அவர்களை மிரட்டி கப்பமாகப் பெருந்தொகைப் பணத்தை வாங்கியுள்ளார்.

இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரும் உடந்தையாகச் செயற்பட்டனர். வர்த்தகர்களின் முறைப்பாட்டின் பேரில் களமிறங்கிய யாழ்.பொலிஸார் நேற்று அதிரடியாக இந்த மூவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com