Tuesday, May 28, 2013

மக்கள் வழங்கியதை மக்களே கவிழ்ப்பார்களா? மக்கள் அதற்கு தயாராக இல்லை! பிரியங்கர

மக்களின் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கவிழ்க்க, மக்கள் எக்காரணம் கொண்டும் தயாரில்லை என, அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஆனமடுவ பங்கதெனிய பிரதான வீதியை காப்பட் இட்டு, அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரியங்கர , காப்பட் வீதியில் நடைபாதையாக செல்வதற்கு கூட, முடியாதுள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு, அரசாங்கத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டக்கூடிய இயலுமை இல்லையென, வலியுறுத்தினார்

No comments:

Post a Comment