Wednesday, May 1, 2013

சுவிஸில் நடாத்தப்பட்ட புளொட் அமைப்பின் மேதின ஊர்வல செய்தியும், புகைப்படங்களும்..

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழமக்கள் விடுதலைக்கழக (புளொட்) சுவிஸ் கிளையும் கலந்து கொண்டது.

தமிழினத்தின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காண வேண்டும், வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்க வேண்டும்.

அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்.

அரசியல் கைதிகளை இலங்கை அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.

சர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்ய வேண்டும்.

போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உதவியும் கிடைக்க வேண்டும்.

வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.

தேவையற்ற இரானுவ முகாம்களை அகற்ற வேண்டும்.

மத, இன ரீதியிலான ஆக்கிமிப்பு நிறுத்தப்பட வேண்டும்.

அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே

போன்ற சுலோகங்கள் தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் த.ம.வி.க (புளொட்) சுவிஸ்கிளை சார்பாக கலந்து கொண்டார்கள்.

இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள SihlPost ல் இருந்து ஆரம்பமாகி Bellevueயில் முடிவடைந்தது.

இவ் மேதினத்தில் த.ம.வி.கழக (புளொட்) சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.

த.ம.வி.க சுவிஸ்கிளை






.

2 comments :

Arya ,  May 2, 2013 at 1:06 AM  

Why this PLOTE didnt joint together with LTTE-Diaspora Demo in Zürich, because PLOTE joined to TNA in Srilanka, and TNA operated by LTTE-Diaspora.

Anonymous ,  May 2, 2013 at 9:22 PM  

Well said Arya ! unanswered question.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com