Monday, May 13, 2013

சவூதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் பலி

சவூதி அரேபியாவின் மதீனா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த பணிப் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஹிதாயத் நகரைச் சேர்ந்த வெள்ளக்குட்டி முஹைதீன் ஜனூபா (வயது 39) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வாகன விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் வீட்டு எஜமானியும் அவரது 3 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com