Friday, May 31, 2013

தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கை விஐயம்!

சுற்றுலா வர்த்தகம் நிர்மாணத்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதை நோக்கமாக கொண்டு தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கொண்டுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஐயத்தின் போது தாய்லந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதுடன். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

அது மட்டுமல்லாது கண்டிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் சியம் மாக பீடத்தின் 260 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

நாளை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் மாலைத்தீவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

No comments:

Post a Comment