Tuesday, May 7, 2013

யானைகளால் வகுப்பறையில் தூங்கும் மாணவர்கள்!

யானைகளின் அட்டகாசத்தால் இரவெல்லாம் தூங்காது விழித்திருக்கம் மொறவேவா பிரதேச அவ்வை கிராம மாணவர்கள் வகுப்பறைகளில் தூங்குவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.திருகோணமலை மொறவேவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அவ்வை நகர் என்னும் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளன.

அக்கிராமத்திலுள்ள மக்கள் இரவு முழுவதும் கண் விழிக்கும் நிலை காணப்படுகிறது. கடந்த யுத்த காலத்தில் அகதி முகாம்களில் தங்கியிருந்த இக் கிராமமக்கள் அண்மையில் மீள் குடியேறிய போதிலும் காட்டு யானைகளின் தொல்லைகளினால் பயிர்கள் நாசமாக்கப்படுவதுடன் வீடுகள் சேதமாக்கப்படுகின்றன.

இரவு வேளைகளில் யானைக்கு காவல் காக்க வேண்டிய அவல நிலையில் பிள்ளைகள் கண் தூங்காதுள்ளனர். இதனால் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் தூங்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் அப்பெற்றோர் தெரிவித்தனர்.

மின் வேலியோ, பாதுகாப்பு அரணோ அமைத்துத்தரும்படி மொறவேவா பிரதேச சபையிடம் கோரிக்கை விடப்பட்டு, ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்ட போதும் பிரதேச சபை, எவ்வித கவனமும் செலுத்தவில்லையென மக்கள் கவலை தெவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com